Thursday, June 23, 2011

#என்னமோ நடக்குது# -- சிறுகதை(150 வார்த்தைகள் மட்டும்)

எப்படி இருக்க செல்லம், உனக்கு எவளோ சொன்னாலும் நீ கேட்கவே மாட்டியா, பாரு நம் வாழ்க்கை இது, அவனுங்க யாரு இதை முடிவு பன்ன? சொன்னபடி கேளு..சரிடா செல்லம். நம்ம ஏற்கனவே முடிவு பண்ணின மாதிரி வர வெள்ளிக்கிழமை.

யோவ் நீயெல்லாம் சோத்த திங்கறயா இல்ல வேற எதையாவது திங்கறயா? எத்தை தடவதான்யா சொல்றது..ஒழுங்கு மரியாதியா அசலக்கட்டு இல்லனா வட்டியக்கட்டு..இதுக்கு மேல பொருமையா இருக்க முடியாது..அதையும் பாக்குறேன்யா.

அண்ணே, எந்த மாற்றமும் இல்லை, நீங்க எவ்ளோ வேனும் கேளுங்க,,சரிணே.. நான் பார்துக்கறேன்.

அம்மா என்னை மன்னிச்சுக்க எனக்கு இதை தவிர வேற வழி தெரியலை..

சார், நான் சொல்றத மட்டும் கேளுங்க..தேவையில்லாம இதுக்கு போய் வருத்தபடதீங்க..என் கிட்ட விட்டுருங்க..

I love you, I love you, I love you..hmmm OKvaa,,cool

என்ன சொல்ற..சரி..OK..இப்பவே வறேன்

நான் ரெடியா இருக்கேன், சீக்கிறம் வாங்க..இன்னைக்கு ராத்திரி..அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது.

என்ன சார் இது உங்களுக்கு OK-னா நாளைக்கே முடிச்சிடலாம்,,உங்க விருப்பம் தான் எனக்கு முக்கியம்.

அடச்சே..என்ன கருமண்டா கண்ணை புடுங்கினவன்..என் காதையும் புடுங்கியிருக்க கூடாதா..இங்க இந்த STD Booth-ஐ வெச்சிட்டு கண்டதெல்லாம் காதுல கேட்க வேண்டியிருக்குன்னு சலித்துக்கொண்டு தன் கடையை சாத்தினார். STD-கார கனகு அண்ணன்.

No comments:

Post a Comment