Wednesday, June 22, 2011

சத்தியம் பண்ணலாம் வாங்க சத்தியம்

நண்பர்களே, இங்க கன்னடத்து அரசியலில் ஒரு முக்கியமான நிகழ்வு, அதாகப்பட்ட முதல்வர் திரு.எடியூரப்பா அவர்களை முன்னாள் பிரதமரின் மகனும்,முன்னாள் முதல்வருமான திரு.குமாரசாமி அவர்கள் அவதூராக பேசிவிட்டாறாம்,எடியூரப்பா மகனுக்கு சீட் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு சீட் குடுத்துட்டாறாம்,நிறைய ஊழல் செய்யராறாம் இதுதான் திரு.குமாரசாமிய்ன வாதம்.

இதை கேட்ட நம்ம திரு.எடியூரப்பா, வெகுண்டு ஒரு பகிரங்க கடிதம் வெளியிட்டாரு.. மானா வாரியா எல்லா பத்திரிக்கையிலும் இது வந்தது.திரு.குமாரசாமி என் மீது வீண் பழி சுமத்துகிறார், இப்படியெல்லாம் ஆதாரம் இல்லாம் அவதூரு சொல்வதை அவர் நிருத்திக்கொள்ள வேண்டும், என் மீது சுமத்தப்பட்டது அபாண்டமான் பழி.. நான் வேண்டுமானால் தர்மஸ்தலா கோவிலுக்கு வந்து சத்தியம் செய்கிறேன், குமாரசாமி வர தயாரா?

இதை கேட்ட குமாரசாமியும் ஓகே.. நானும் வறேன்னு கிழம்பிட்டாருங்க.. இந்த உத்தமபுத்திரங்களின் சத்தியம் செய்யும் நிகழ்ச்சி வரும் 27-06-2011 திங்கள் அன்று தர்மஸ்தலா கோவிலில் மஞ்சுநாதர் (எ) சிவன் முன்பு நடக்கிறது.

இந்த செய்திய கேள்வி பட்டதும் உங்களுக்கு என்ன சொல்ல தோனுதுங்க..எனக்கு என்ன தோனுது தெரியுங்களா "போங்கடா மானங்கெட்ட _____ பயலுகளா" #முற்றும்#

1 comment:

Anonymous said...

சாமிக் கும்பிட ஆசைனு சொல்லிட்டு கும்பிட்டு வரவேண்டியது தானே.. ஏன் இந்தக் கொலைவெறி அவிய்ங்களுக்கு..


**************************

ஒரு டாலர் திருடினால் தப்பா ?

Post a Comment