Saturday, July 30, 2011

இருபாதை ஒரு பயணம் (2in1 சிறுகதை)

கதவை ஒட்டின ஜன்னலின் வெளியே கணேஷ் நின்றிருக்க,உள்ளே கீதா. அவளிடமிருந்து மூன்று ஜன்னல் தள்ளி கவிதா இருக்க வெளியே நின்றிருந்தான் வஸந்த்.

"அப்ப நீங்க இவ்ளோ நாள் என்னோட பழகினதெல்லாம் பொய்யா?"

"என்னை உனக்கு அவ்ளோ புடிக்குமா?"

"எது பொய் எது நிஜம்னு என்னால இப்ப சொல்லமுடியலை"

"அது அப்படியில்லைமா, நான் உன்னை விரும்பினது உண்மைதான் ஆனா இப்ப என்னால் அது முடியாது, என்னை மன்னிச்சிடு!"

"ஆமாம், நான் உன் பின்னால சுத்துனதுப்ப தெரியலையா?"

.....டீ..சாய்..டீ..சாய்.. டீ..சாய்..காபி..காபி...காபி.......

"ஏன், முடியாதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணீங்க?

"அப்ப தெரியலை ஆனா இப்ப தெரியுது..என்னை மன்னிச்சிருமா"

" நீங்க நான் ஊருக்கு போனதுக்கு அப்புறம் என்னை மறந்துடுவீங்கதான்?"

"நான் உன்னை உண்மையா காதலிக்குறேன்"

"அதுமட்டும் என்னால முடியாது"

"என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது"

"ஏன், முடியாதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணீங்க?"

"என்னை இதுக்குமேல எதுவும் கேட்காத, இந்தா ரெஷிப்ட் உன் திங்க்ஸ் எல்லாம் பார்சல்ல வருது, நாளைக்கு சாயங்காளம் உங்க அண்ணனை எடுத்துக்கச்சொல்லு"

"கணேஷ்! கணேஷ்!......." பயணிகளின் கணிவான கவனத்திற்கு...வண்டி எண்!"

"இப்ப முடியாதுன்னுதான் சொன்னேன், இன்னும் ஒரு வருசம், அப்புறம் கல்யாணம் தான்"

"............"

"நான் போய் பசங்களுக்கு டீரீட் வெச்சு இதை கொண்டாடனும், பார்த்துப் போ, டாடா"

"வஸந்த்!வஸந்த்!...."....யாத்திரியோ கிரிபியா தீயான் தீஜியே!..காடி நம்பர்.."

"உங்க அம்மா சாகக்கெடக்குறாங்க..அவங்க தம்பிக்கு உன்னை கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டு போகனும்னு நினைகிறதா உங்க அண்ணன் போன்ல சொன்னான் என்ற கணேஷின் என்னமும்.."

"நான் உயிருக்குயிரா காதலிச்சவன், என்னை ஏமாத்திட்டான்; இப்ப எனக்கு வாழ ஒரு பிடிப்பு வேணும், என்னை உயிரா காதலிக்கர நீ தான் எனக்கு சரி என்ற கவிதாவின் என்னமும்.."

.....டீ..சாய்..டீ..சாய்.. டீ..சாய்..காபி..காபி...காபி.......என்ற ஓசையில் கலந்தது.

3 comments:

ச ஜா அமல் said...

எழுத்தாளருக்கு ஒரு டீ, காப்பி, டீ சாயா சாய் சாய் சா..

viswa said...

thambi TEA innum varala.......

jroldmonk said...

good try .. keep going nanba :)

Post a Comment