Friday, July 29, 2011

ஒரு வீட்ல பேய்! சிறுகதை(50 வார்த்தைகளில்)

வாயில் ஈ போய்வந்து கொண்டுடிருந்தது. சுவற்றை வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண் இமையை மூடினார் இன்ஸ்பெக்டர்.

நேத்து ராத்திரி கூட நல்லாத்தான் இருத்தாங்க!

நல்லிரவு வீட்டுக்குள் வந்ததும், துரிதமாக எதையோ தேடிக்கொண்டு இருந்தான் சிவா. என்னடா தேடற? ஒன்னும் இல்லை என்று பதில் சொன்னவன்! ஒரு நிமிடம் திடுக்கிட்டான்..சக்தி ஊருக்கு போய் ஒரு வாரம் ஆனது உறைத்தது.

திரும்பியன், சுவற்றில் சரிந்து அமர்ந்தான்.பயத்தில் உயிர் பிரிந்தது.

1 comment:

viswa said...

ungalukulla oru kutti SUJATHA thoongikittu irukkaaru.....avar seekiram thatti yeluppunga,.....

Post a Comment